திங்கள், டிசம்பர் 28, 2009

ஆறிலொண்டு

படுத்தாத பாடுபட்டு பாஸ் எடுத்து கொழும்பு வந்து
படிச்சாச்சு எண்டு சொல்லப் பாடமில்லை - குடுத்தாச்சு
பத்து வருசமாய் பண்ணியது எல்லாமும்
விடு தாயே என்ரை விதி!

பொலிசு ரிப்போட், போட்டோக் கொப்பி போக வர ஐடிங்காட்
கலிமுற்று இந்நாட்டின் கரைச்சல்களை- தலை நகராய்
இருந்தாய் என்பதனால் இவ்வளவு நாள் நடந்ததுவோ
பொறுக்கேலாதினி நானும் போறன்.

கூச்சல் குடுக்காரன் குறையுடுப்பு அன்ரிமார்
பேச்சு இனிக்காது பெறமாட்டா - வாச்சுமேனாய்
வாய்த்தார் வாய்வைக்கும் வாசல்களை விட்டுவிட்டு
போய்ச்சேர்வதே நல்ல புத்தி!!!


26 12 2009

கருத்துகள் இல்லை: