திங்கள், ஜூலை 27, 2009

கந்தா நீ கடவுள் !!

கிடைக்காத பழத்திற்காய் சினங்கொண்டு மலையேறி
உடை வெறுத்து நின்றாயே, உன்னிலையில் எஞ்சனங்கள்
கிடைக்காத பலத்திற்கு கீழ்ப்பட்டு நின்றார்கள்
அடைக்காதே உன் கதவை அகதிகளுக்கிடம் வழங்கு!!

கோவப்பட்ட மனிதனுக்கு கோவணந்தான் மிஞ்சுமெனில்
பாவப்பட்ட தமிழனுக்கு பதில் என்ன? ஆதனத்தில்
பங்கு கேட்டதற்கா பரப்பிரமம் பழிவாங்கும்? தீயவற்றை
சங்கர்த்துக் காக்கும் தமிழே நீ எழுந்திடுவாய்!!!

கொடியேற்று குறை விலக்கு கொடியவர்கள் கலங்கிடவும்
அடிபோட்டு விளையாடு, அன்பர்கள் விருப்பங்களை மேல்
படியேற்று மிடி மாற்று பகலிரவு வரும்போகும்
வடிவேலே பயம் மாற்று பக்தர்களுக்கு அருள் கூட்டு!!

27 07 2009