புதன், ஏப்ரல் 15, 2009

நல்லவனாய் நானிருந்து............


கட்டழகுப் பெண்பதுமை கடைவீதி வலம்வந்தால் 
தொட்டவளைப்பேசிடவே தூண்டல் வரும் - அப்பிடியோ
என்வீட்டாள் இதைக்கேட்டால் என்னாகும்? உடனடியாய்க்
கொன்றிடுவாள் என்னைக் கொளுத்தி!

ஆரோடும் கதைச்சான் அதைச்சொன்னான் இதைச்சொன்னான்
தேரோடும் வீதியிலும் திரிஞ்சான் -கூறோணும்
கேட்டவளோ வறுப்பாள் கீழ்நெருப் பெரியவைத்து
காட்டுங்கடா என்மேல் கருணை!

ஆருக்கும் தெரியாமல் அன்றைக்கு நாம்பார்த்த
கோதாரி சகிலாவின் குறையுடுப்பை – போய்நாறி
இந்தக் கதையெல்லாம் இவளுக்குச் சொன்னாயேல்
கந்தகம் புகையும் கறுப்பு!

சத்தம்போட்டு அழுது சண்டை பிடித்தாளேல்
மெத்தவும் நான் மகிழ்ந்து மீண்டிடுவேன் - அதைவிடுத்து
முத்த நிறுத்தம் முறுவல் தவிர்ப்பென்றால்
செத்திடுவேன், வையும் சிலை!

21.01.2009

கருத்துகள் இல்லை: