புதன், ஏப்ரல் 15, 2009

புத்தாண்டு எதிர்பார்ப்பு

கனவுகள் எப்போது பலிக்கும் - உன்
கருணையின் மணியெப்ப ஒலிக்கும்
விடிவுகள் எப்போது கிடைக்கும் - அதன்
விளைவுகள் எப்போது நடக்கும்?

அழுகைகள் எப்போது அடங்கும்? - உன்
அருளது எப்போது தொடங்கும்?
தொழுகையின் பலனது கிடைக்கும் - உன்
தொலைவுகள் எப்போது நெருங்கும்?

அமைதிக்கு எங்கேதான் இடமோ- தமிழ்
ஆட்களின் மேலென்ன விசமோ?
சிலைவைத்து வணங்குதல் பிழையோ- நீ
சிறையெனும் செய்தியை அறியோம்!!!

ஆண்டவா கண்திறந்தாடு- இல்லை
ஆள்பவர் பேயெனச் சாடு
வேண்டினால் வேண்டுதல் தருவாய்- தமிழை
விரும்புவாய் காத்திடு குருவாய்!!!

14.04.2009

கருத்துகள் இல்லை: