சனி, பிப்ரவரி 28, 2009

எதிர்பாராதே இனி!

வீட்டாலே கலைத்தாய்
வெறுநிலத்தில் படுக்கவைத்தாய் -தட்டிக்
கேட்டாரைத் துலைத்தாய்
கேடுகளை மலிய விட்டாய்

தோட்டா குண்டொன்றும்
தொட்டிராத என்தம்பி
காட்டுப் புலியென்று
கதைவிட்டாய் கருக்கிட்டாய் -இவ்வளவும்

போட்டும் நீ சும்மா
புரியாமல் விலங்காக
வாட்டியெடுக்கின்றாய்
வரலாறே இனிமேலும்

நேற்றுப்போல் என்னிடத்தில்
நியாயத்தை கேட்டாயேல்
சீற்றம் வரும் செத்தாய்
சினம் மிருக குணமாமோ?

வாயுபுத்திரன்