ஞாயிறு, மே 25, 2008

நான் ஒரு குப்பை வாளி!

கூட்டிக் குவித்ததனை கொட்டவொரு இடந்தந்து
நாட்டைச் சுத்தமாக்கும்
நானொரு குப்பைவாளி!

எலிகள் பூனையென எல்லோரும் உறவாடும்
நிலையைக் கொடுக்கின்றேன்
நிச்சயமாய்க் குப்பைவாளி!

அள்ளிப்போகவரும் அந்த வண்டி நாற்றத்தை
சொல்லாமற் கொட்டிவிட்டு
சுத்தம் செய்யும் குப்பைவாளி!

நானில்லா நாளொன்று நன்றென்று நீர் நினைத்தால்
கான் நாறும் கழிவெல்லாம்
கதை சொல்லும் கதை சொல்லும்!

வாயுபுத்திரன்
24.02.2009